உடுமலை- பழனி ரோட்டில் குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல்: போக்குவரத்து ஸ்தம்பிப்பு
2022-11-26@ 17:57:37

உடுமலை: குடிநீர் வராததை கண்டித்து, உடுமலை- பழனி சாலையில் கிராம மக்கள் இன்று காலை காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மடத்துக்குளம் ஒன்றியம் கிருஷ்ணாபுரம் அருகே மைவாடி ஊராட்சி உள்ளது. இங்குள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால், மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில், ஆவேசமடைந்த கிராம மக்கள் இன்று காலை 7.30 மணிக்கு காலி குடங்களுடன், உடுமலை- பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் 150 பெண்கள் உட்பட 250 பேர் பங்கேற்றனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இத்தகவல் அறிந்த மடத்துக்குளம் போலீஸ் எஸ்ஐ., சக்திவேல் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவயிடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், தண்ணீர் இல்லாமல் குடிக்கவும், குளிக்கவும் வழியில்லாமல் அவதிப்படுகிறோம். பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து, மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
மேலும் செய்திகள்
தென் இந்தியாவில் முதல் முறையாக சங்கரன்கோவில் அருகே 120 அடி உயர உலக அமைதி கோபுரத்தில் புதியதாக புத்தர் சிலைகள் அமைப்பு: புத்த துறவிகள் பங்கேற்பு
தமராக்கி மஞ்சுவிரட்டு, ஆவியூர் ஜல்லிக்கட்டில் திமிலை உயர்த்தி திமிறிய காளைகளை தீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்கள்
திருவாரூர் கோயிலில் ஏப். 1ல் ஆழித்தேரோட்டம்: 5 தேர்களுக்கு சீலைகள் பொருத்தும் பணி தீவிரம்
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
கொளுத்தும் வெயில் தாக்கத்திலிருந்து ஆடு, மாடுகளை பாதுகாக்க அசத்தல் ‘டிப்ஸ்’: விவசாயிகளுக்கு கால்நடைத்துறை அட்வைஸ்
அலங்காநல்லூர் அருகே பெரியாறு கால்வாய் பாலம் ‘டமால்’: இடிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கு அவதி
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்