தாம்பரம் அருகே பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைரம் கொள்ளை
2022-11-26@ 08:55:34

சென்னை: தாம்பரம் அருகே பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைரம் கொள்ளையடித்துள்ளனர். சோலையூர்-வேளச்சேரி சாலையில் பிரபல நகைக்கடையில் அரங்கேற்றப்பட்ட கொள்ளை சம்பவம் குறைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நகைக்கடையை மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கி உள்ளனர்.
தற்போது கடை காலை 10 மணி அளவில் திறக்கப்பட்டு இரவு 9 மணி அளவில் கடையில் விற்பனை நடைபெறும். கொள்ளை சம்பவம் காலை 4.35 மணியளவில் நடைபெற்றுள்ளது. மர்மநபர்கள் உள்ளே நுழைந்த தகவல் நகைக்கடையின் உரிமையாளர் செல்போன் மூலம் தெரியவந்துள்ளது. மாடியில் இருந்து லிப்ட் வழியாக கடைக்குள் புகுந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளும் திருடப்பட்டன. லாக்கரை திறக்க முயற்சி செய்த போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு இருக்கக்கூடிய காவலாளிக்கு தகவல் கூறியுள்ளார்.
உடனே ஊழியர்களை வரவழைத்து கடையின் ஷட்டரை திறந்து பார்த்துவிட்டு கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள அனைத்து நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கைரேகை மற்றும் தடவியர் நிபுணர்களை வரவழைத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
போதையில் கலாட்டா செய்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ் நிலையத்தில் புகுந்து தகராறு செய்த பாஜ நிர்வாகி கைது
நாகப்பட்டினத்தில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல் 3 பேர் கைது
காரை மாத வாடகைக்கு ஒப்பந்தம் செய்து பல லட்சம் மோசடி செய்த பெண் கைது; 7 கார் பறிமுதல்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்
நீதிமன்ற ஊழியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை
ஸ்ரீபெரும்புதூர் அருகே அதிமுக பிரமுகர் சரமாரி வெட்டி கொலை: முன்விரோதம் காரணமா என போலீசார் விசாரணை
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி