வியாபாரியை தாக்கியதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் மீது வழக்கு
2022-11-26@ 01:27:04

நாகர்கோவில்: குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள காணிமடத்தை சேர்ந்தவர் ஈசாக். இவர் வடசேரி கனகமூலம் சந்தையில், முருங்கைக்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் வடசேரி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனுடன் எனக்கு நட்பு உண்டு. அந்த வகையில் வியாபாரம் சம்பந்தமாக நாஞ்சில் முருகேசனிடம் ரூ.2 லட்சம் கடன் கேட்டு இருந்தேன்.
சம்பவத்தன்று இந்த கடன் தொகையை தருவதாக என்னை அழைத்தார். அதன் பேரில் நான் அவரை சந்திக்க புத்தேரி பராசக்தி கார்டன் சென்றேன். அங்கு நின்று கொண்டிருந்த நாஞ்சில் முருகேசன் மற்றும் அவரது கார் டிரைவர் பேச்சான்குளத்தை சேர்ந்த மகேஷ் ஆகியோர் என்னை பார்த்ததும், தகராறு செய்து தகாத வார்த்தைகள் பேசி கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர் என கூறி இருந்தார். இந்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் விசாரணை நடத்தி,இந்திய தண்டனை சட்டப்பிரிவு 294 (பி), 323, 506 (i) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஆருத்ரா நிதி நிறுவனம் ரூ.2,438 கோடி மோசடி முக்கிய குற்றவாளியான பாஜ நிர்வாகி ஹரிஷ் கைது: ரகசிய இடத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை
சிறுவனுக்கு செக்ஸ் டார்ச்சர் வாலிபர் போக்சோவில் கைது: உடலில் கடித்து காயப்படுத்திய கொடூரம்
ரவுடியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது
மணிப்பூரில் இருந்து கடத்தி வந்த 9 கிலோ மெத்தம் பெட்டமைன் போதை பவுடர் பறிமுதல்: 2 பேர் கைது; முக்கிய குற்றவாளிக்கு வலை
புதிய இணைப்புக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் மின்வாரிய அதிகாரி கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி