திருப்பதியில் டிசம்பர் மாதத்துக்கான அங்கபிரதட்சண டிக்கெட் மூன்றே நிமிடத்தில் முடிந்தது
2022-11-26@ 00:09:00

திருமலை: திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான அங்கபிரதட்சண இலவச டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட 3 நிமிடத்தில் முடிந்துவிட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதத்திற்கான அங்கபிரதட்சண இலவச டிக்கெட் நேற்று காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்பட்டது. டிசம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரையில் வெள்ளிக்கிழமைகள் தவிர்த்து மொத்தம் 25 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1,000 டிக்கெட்கள் என 25 ஆயிரம் இலவச அங்கபிரதட்சண டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட 3 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளையும் பக்தர்கள் பதிவு செய்து விட்டனர். மேலும், நேற்று காலை நிலவரப்படி திருப்பதி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 7 அறைகள் பக்தர்களால் நிரம்பி இருந்தது. இதனால், பக்தர்கள் 16 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். முன்னதாக, நேற்று முன்தினம் 66 ஆயிரத்து 72 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதில், ரூ.4.23 கோடி காணிக்கையாக கிடைத்தது.
Tags:
Tirupati December Angapradtsana ticket in just three minutes திருப்பதி டிசம்பர் மாத அங்கபிரதட்சண டிக்கெட் மூன்றே நிமிடத்தில்மேலும் செய்திகள்
கேரளாவில் இன்று முதல் மின் கட்டணம் உயர்வு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி எங்கே?.. ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து டெல்லியில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்..!
அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி: உலக பணக்காரர்கள் பட்டியலில் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்
சாமானிய மக்களுக்கு பலன் தரும் பட்ஜெட்; வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்..!
ஜெகன் அண்ணா காலனியில் வீடுகள் கட்டும் பணியை மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டும்-சித்தூர் ஆணையாளர் உத்தரவு
திருப்பதி பைரெட்டிபள்ளி பகுதியில் ₹3.25 கோடியில் புதிய சிமெண்ட் சாலைகள், கால்வாய்கள்-எம்பி தகவல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!