பெண்ணின் வீட்டு சுவரை இடித்த பாஜ நிர்வாகிக்கு போலீஸ் வலை
2022-11-25@ 17:14:59

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை அருகே உள்ள ரெட்டியார் காலனியை சேர்ந்தவர் வசந்தகுமாரி. ஜெயங்கொண்டம் மேலகுடியிருப்பை சேர்ந்தவர் ராமர். ஜெயங்கொண்டம் நகர பாஜ தலைவர். இந்நிலையில், வசந்தகுமாரி புறம்போக்கு இடத்தில் தனது வீட்டின் சுற்றுச்சுவரை கட்டியுள்ளதாக கூறி, நேற்று முன்தினம் அத்துமீறி சென்று பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சுற்றுச்சுவரை, ராமர் இடித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் வசந்தகுமாரி புகார் செய்தார். அதில், பட்டா உள்ள இடத்தில் தான் வீட்டின் சுற்றுச்சுவர் கட்டியுள்ளேன். ஆனால் அத்துமீறி நுழைந்து பாஜ நகர தலைவர் ராமர், சுற்றுச்சுவரை இடித்து விட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து பாஜ நகர தலைவர் ராமர், பொக்லைன் டிரைவர் ராம்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைதொடர்ந்து ராம்குமாரை நேற்று கைது செய்ததுடன், பொக்லைனை பறிமுதல் செய்தனர். ராமரை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்
அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆவின் பணி நியமனம் ரத்து எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
ஊட்டி மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவக்கம்
நாகத்தின் வாந்தியில் இருந்து வந்த மாணிக்க கல் என கூறி சாமியார் வேடத்தில் ஏமாற்றிய போலி ஐஏஎஸ் மீது வழக்கு
எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு
மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன் குற்றச்சாட்டு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!