SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் உண்டியலில் ரூ.65.28 லட்சம் பக்தர்கள் காணிக்கை

2022-11-25@ 16:56:27

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் ரூ.65.28 லட்சமும்,  332 கிராம் தங்கமும், 664 கிராம் வெள்ளியும் செலுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள்  வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கையாக பணம், தங்க நகை, வெள்ளி செலுத்துவது வழக்கம்.  இந்நிலையில், நேற்று கோயிலில் உள்ள இரண்டு நிரந்தர உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் பணி  நடைபெற்றது.

உண்டியல் எண்ணும் பணிக்கு காஞ்சிபுரம் உதவி ஆணையர் முத்து ரத்தினவேலு தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இப்பணியில் கோயில் ஊழியர்களும், தன்னார்வலர்களும் ஈடுபட்டனர்.  இதில், 65 லட்சத்து 28 ஆயிரத்து 071 ரூபாய் ரொக்கமும், 332.640 கிராம் தங்கமும்,  664.290 கிராம் வெள்ளியும் இருந்தன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது காமாட்சி அம்மன் தேவஸ்தான  காரியம் சுந்தரேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்