செய்யாறு அரசு கல்லூரியில் கோழிகளை தாக்கும் வெள்ளை கழிச்சல் நோயை கட்டுப்படுத்தும் மருந்திற்கான மூலப்பொருள் கண்டுபிடிப்பு-ஆராய்ச்சிமாணவர் சாதனை
2022-11-25@ 14:33:32

செய்யாறு : செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியரின் மேற்பார்வையில் ஆராய்ச்சி மாணவர் கோழிகளைத் தாக்கும் வெள்ளை கழிச்சல் (நியூ கேஸ்டில் வைரஸ்) நோய்க்கு மருந்து கண்டுபிடித்து முனைவர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ஞா.பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் எம்பில் மற்றும் பிஎச்டி படிப்புகளில் மாணவ மாணவிகள் படித்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு ஆய்வு கட்டுரைகளைச் சமர்ப்பித்து வருகின்றனர். இவர் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் பல்வேறு துறைகளிடமிருந்து ஆராய்ச்சி நிதிகளைப் பெற்று ஆராய்ச்சி செய்து வருகிறார். இவர் ராணிப்பேட்டை கால்நடை தொற்று நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிலையத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் பத்மராஜ் மற்றும் வேலூர் மைக்ரோலேப் இயக்குனர் சிவமணி ஆகியோர் உதவியுடன் கோழிகளுக்கு அதிக இறப்பை ஏற்படுத்தும் நியூகேஸ்டில் வைரஸ் நோய் என்கிற வெள்ளைக் கழிச்சல் நோய் பற்றி இவர் ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வைரசினால் கோழிப்பண்ணையில் அதிக அளவில் இறப்பு ஏற்படுத்துவதால் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுத்துகிறது. இது குறித்து ஆராய்ச்சி மாணவர் என்.கார்த்திகேயன் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார். இவ்வாராய்ச்சியின் முடிவில் ஆண்டோகிராயிக் பெனிகுலேட்டா தாவர அறிவியல் பெயர் கொண்ட நிலவேம்பில் எண்ணற்ற பைட்டோ கெமிக்கல் பொருட்கள் அடையாளம் காணப்பட்டு இதன் முதன்மையான கூறுகளான கிளைக்கேசைட்ஸ், பீனால், டேனின், அல்கலாய்டு, பிளாவானாய்டுகள், ஸ்டீராய்டுகள் கண்டறியப்பட்டன.
இம்மூலப்பொருட்களை நீரில் கலந்து கொடுப்பதன் மூலம் நியூகாஸ்டல் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கோழிகளின் இறப்பைக் கட்டுப்படுத்தலாம். இம்மூலக்கூறுகள் செலவு குறைவானவை, பக்க விளைவு அற்றவை, சுற்றுச் சூழலுக்கு உகந்தவை ஆகும். கோழியை உண்ணக்கூடிய மனிதர்களுக்கு ஆண்டிபயாடிக் எச்சம் செல்வதைத் தடுக்கப்படுகிறது.
இந்த ஆராய்ச்சியின் படைப்பைக் கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் விலங்கியல் துறையில் சென்னை நந்தனம் ஆண்கள் கலைக்கல்லூரி பேராசிரியர் கு.ஏழுமலை, வேதியியல் துறைத் தலைவர். சி.த.ரவிச்சந்திரன், விலங்கியல் துறைத் தலைவர் நா.புனிதா, முன்னாள் விலங்கியல் துறைத் தலைவர் ச.துரைராஜ் முன்னிலையில் ஆராய்ச்சியாளர் என்.கார்த்திகேயனுக்கு முனைவர் பட்டம் வழங்க பரிந்துரைக்கபட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் ந.கலைவாணி, கல்லூரி பிற துறையை சேர்ந்த தலைவர்கள் கண்ணன், முருகேசன், ராமலிங்கம் மற்றும் பேராசிரியர்கள் ஆராய்ச்சி மாணவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
சிவாயம் வில்கல்பட்டியில் மாடு மாலை தாண்டும் திருவிழா கோலாகலம்-வெற்றி பெற்ற மாடுகளுக்கு தேவராட்டத்துடன் மரியாதை
கிரீன் தமிழ்நாடு மிஷன் திட்டத்தின் கீழ் கொடைக்கானல் வனப்பகுதியில் 10 லட்சம் சோலை மரக்கன்றுகள் நட்டு வனத்துறை சாதனை
சந்திராபுரம் சாலையில் கழிவுகளை கொட்டிய டிராக்டர் சிறை பிடிப்பு-ரூ.5 ஆயிரம் அபராதம்
விவசாய பயன்பாட்டிற்காக ஆழியார் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி-விவசாயிகள் மகிழ்ச்சி
சூறைக்காற்றுடன் பலத்த மழை தார்கள் வெட்டும் பருவத்தில் வாழை நாசம்-விவசாயிகள் கவலை
கோழிப்பண்ணைகளில் திடீர் ஆய்வு வடமாநில தொழிலாளர்களுடன் டிஐஜி கலந்துரையாடல்
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!