சாதிச்சான்றிழ் வழங்காததை கண்டித்து பழங்குடியின மாணவர்கள் 2ம் நாளாக பள்ளி புறக்கணிப்பு
2022-11-25@ 14:11:56

ஊட்டி : ஊட்டி அருகே சாதி சான்று வழங்க கோரி 200க்கும் மேற்பட்ட மலைவேடர் இன பழங்குடியின மாணவர்கள் 2வது நாளாக பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊட்டி ஒன்றியம் உல்லத்தி ஊராட்சிக்குபட்ட தட்டனெரி, பன்னிமரா கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவேடர் இன பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். 3 தலைமுறைகளுக்கு மேல் வாழ்ந்து வரும் இவர்களுக்கு கடந்த சில ஆண்டுக்கு முன் வரை இந்து மலைவேடர் என்ற பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் வழங்கபட்டு வந்தது. இதனால், ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயனடைந்து வந்தனர். மேலும், பல்வேறு துறைகளிலும் பணியாற்றி வருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வியை தொடர முடியாமல் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் முதுகலை பட்டம் பெற்றும் கூட வேலை வாய்ப்பு கிடைக்காமல் கூலி வேலை செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாதிச் சான்றிதழ் இல்லாததால் அரசு வேலை மற்றும் அரசு சலுகைகள்கூட பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும், பல்வேறு போட்டி தேர்வுகளை எழுத முடியாமலும் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தங்களது குழந்தைகள் கல்வி கற்றும் எந்த பலனும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று 2வது நாளாக தட்டனெரி மற்றும் பன்னிமரா ஆகிய கிராம மக்கள் 200க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளி, கல்லூரிக்கு அனுப்பாமல் வீடுகளிலையே வைத்துள்ளனர். அந்த மாணவர்களும் சீருடை அணிந்து தட்டேனேரி கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கோவை இளைஞர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் 31.66 லட்சம் உண்டியல் காணிக்கை
பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரியில் பெண்கள் மீதான கொடுமைகள் குறித்த நிலை காட்சி: ‘தத்ரூபமாக’ மாணவிகள் நடித்துக் காட்டினர்
மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்து தரக் கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம்; பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை: பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம்..!
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிப்பு: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் தொடக்கம்!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!