திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு-முதன்மைச் செயலாளர் பங்கேற்பு
2022-11-25@ 14:08:19

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து, அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் ஆய்வு நடத்தினார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த மாவட்ட கண்காணிப்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். டிஆர்ஓ பிரியதர்ஷினி, ஆர்டிஓ மந்தாகினி, கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப்சிங், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் சரண்யாதேவி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலரான தமிழக அரசின் முதன்மை செயலாளர் தீரஜ்குமார், மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது, வேளாண் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நடப்பு நிதி ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகளின் விவரம் குறித்து, துறைவாரியாக ஆய்வு செய்தார்.
மேலும், நடப்பு நிதி ஆண்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்த திட்டப்பணிகளை முழுமையாக நிறைவேற்றி முடிக்க வேண்டும், பயனாளிகள் தேர்வில் வெளிப்படையான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றார். மேலும், ஊரக வளர்ச்சித்துறைகளில் நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், மாவட்டத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளை அதிகாரிகள் முன்கூட்டியே நேரில் பார்வையிட்டு தடுப்பு பணிகளை செய்ய வேண்டும் என்றார்.
அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை ஆனைக்கட்டி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில், ஊட்டச்சத்தை உறுதி செய்வோம் எனும் திட்டத்தின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். மேலும், அண்ணா நகரில் உள்ள மாவட்ட மருந்து கிடங்கில் ஆய்வு நடத்தினார். அடி அண்ணாமலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தையும், மெய்யூர் கிராமத்தில் மிளகு சாகுபடியையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர், கீழ்பென்னாத்தூர் பகுதியில் மாணவர் விடுதிகளை அவர் பார்வையிட்டார்.
மேலும் செய்திகள்
தமிழக அரசியல் களத்தை பாஜக மாற்றிவிட்டது.! பாஜகவிற்கு கூண்டுக்குள் இருந்து, வெளியே வரும் நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை பேச்சு
கரூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம்: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
நாட்றம்பள்ளி தாலுகாவில் குறவர் இன மக்களுக்கு ஜாதி சான்று வழங்க வேண்டும்-தாசில்தாரிடம் மனு
திருப்பத்தூர் ஆண்டியப்பனூர் அணையில் ₹5.97 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்-கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு
ஜோலார்பேட்டை அருகே அடிக்கடி ரயில்வே கேட் மூடுவதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதி-மேம்பாலம் அமைக்க கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைக்கு அடிமையான மாணவர்களை கண்டறிந்து நல்வழிப்படுத்த வேண்டும்-கல்லூரி முதல்வர்களுக்கு எஸ்பி அறிவுரை
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி