வேலூர் பெருமுகையில் மணல் அள்ளும்போது பாலாற்றில் சிவலிங்கம்,கோயில் தூண்கள் மீட்பு-வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு
2022-11-25@ 12:51:01

வேலூர் : வேலூர் பெருமுகை பாலாற்றில் மணல் அள்ளும்போது சிவலிங்கம், கோயில் தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வேலூர் அடுத்த பெருமுகை பாலாற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மணலை அள்ளி விற்பனை நிலையத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கிருந்து பொதுமக்களுக்கும், லாரி உரிமையாளர்களுக்கும் லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று பாலாறு கரையோரம் மணல் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது 10 அடி அழத்தில் மணல் அள்ளும்போது அங்கு கற்களால் ஆன சிவலிங்கம் மற்றும் கோயில்கள் தூண்கள், சிறிய வகையான செதுக்கிய கற்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக அப்பகுதியில் மணல் அள்ளும் பணியை தொழிலாளர்கள் தற்காலிகமாக நிறுத்தினர். தொடர்ந்து இதுகுறித்து அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அங்கு மணலில் புதைந்து இருந்த சிவலிங்கத்தின் அடிபகுதி (ஆவுடையார்) ஒன்றும், கோயில் தூண்களும் கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். இருப்பினும் அந்த பொருட்களை அங்கிருந்து கொண்டு செல்லவில்லை. தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் மேலும் கற்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்கு ஆராய்ச்சி பணியை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ரேஷன் பொருட்கள் வாங்க தினமும் 2 கிலோமீட்டர் நடந்து ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் சென்று வரும் கிராம மக்கள்
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பக்தி பரவசம்..!
நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
விளாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கலைஞர் அரங்க கட்டிடம் திறப்பு
வருவாய் மீட்பு சட்டத்தில் அசல் ஆவணங்களை விடுவித்து கிரையதாரர்களிடம் ரூ.6 லட்சம் வசூல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!