காங்கிரஸ் கட்சியை கோயிலாக கருதுகிறேன்; உயிருள்ள வரை காங். கட்சியில் இருப்பேன்: ரூபி மனோகரன் பேட்டி
2022-11-25@ 11:46:12

நெல்லை: காங்கிரஸ் கட்சியை கோயிலாக கருதுகிறேன் என ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் வரை நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி காலையில் அறிவித்தார். ஆனால், மாலையில் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை நிறுத்தி வைத்து மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக நெல்லையில் தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது; இடைக்கால நீக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்த சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நன்றி. காங்கிரஸ் கட்சி பலமாக செல்கிறது என்பதற்கு உதாரணம் தான் இது. மாநில அளவில் நடக்கும் நிகழ்வு அகில இந்திய தலைமைக்கு செல்லவில்லை என்ற போய் நிரூபணம் ஆகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தான் என் தெய்வம் எனது குடும்பம். காங்கிரஸ் கட்சிக்காக எனது வாழ்க்கையை ஒப்படைத்து விட்டேன். இறுதி மூச்சு உள்ளவரை காங்கிரசில் மட்டுமே அரசியல் பணியாற்றுவேன்.
ராகுல் காந்தியின் நடைபயணம் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைவரையும் ஒருங்கிணைக்கும் பண்புடைய தலைவர் தலைமை பொறுப்பில் உள்ளார். காங்கிரஸில் இனி தவறு நடக்காது ; பழைய சம்பவங்களை மறக்க வேண்டும். 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் எனவும் கூறினார்.
மேலும் செய்திகள்
மாணவர்களின் நலன் கருதி முன்கூட்டியே தேர்வுகளை நடத்தி கோடை விடுமுறை அளிக்க வேண்டும் :அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா ஓராண்டுக்கு சிறப்பாக கொண்டாடப்படும் : சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!!
அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.. 57.1% பேர் பாஜக ஆட்சி மீது கோபத்தில் உள்ளதாக கருத்து கணிப்பில் தகவல்!!
ஊழல் குற்றச்சாட்டுகளால் பாஜவுக்கு பின்னடைவு கர்நாடக தேர்தலில் காங்கிரசின் கை ஓங்குமா
சொல்லிட்டாங்க...
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!