தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் குளிர்சாதன பேருந்தில் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்
2022-11-25@ 03:04:03

தாம்பரம்: தாம்பரம் போக்குவரத்து பணிமனைக்கு சொந்தமான அரசு குளிர்சாதன மாநகர பேருந்து (தடம் எண் 21டி) நேற்று மதியம் பிராட்வே பகுதியில் இருந்து பயணிகளுடன் தாம்பரம் நோக்கி ஜிஎஸ்டி சாலையில் வந்து கொண்டிருந்தது. தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்றபோது திடீரென பேருந்தின் மேற்கூரையில் இருந்து புகை வந்துள்ளது. இதனை கண்ட பயணிகள் கூச்சலிட்டனர்.
உடனே, சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் முத்து, பேருந்தை ஜிஎஸ்டி சாலையில் நிறுத்தியுள்ளார். இதனையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்து கீழே இறங்கி ஓடினர். ஜிஎஸ்டி சாலையில் தாம்பரம் நோக்கி சென்ற வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அருகிலுள்ள கடைகளில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் முடியாததால், தாம்பரம் தீயணைப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால், அதற்குள் அங்கிருந்த போக்குவரத்து போலீசார் பக்கத்தில் தானே பணிமனை உள்ளது. எனவே, பேருந்தை அங்கு கொண்டுசென்று தீயை அணைத்து கொள்ளுங்கள் என கூறி பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனால், பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டு புகை வந்துகொண்டே இருக்கும் நிலையில் அதை எப்படி இயக்க முடியும், என தீயணைப்பு வீரர்களுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், சக போலீசார் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து கலையை செய்தனர். தீவிபத்து விபத்து குறித்து தாம்பரம் போலீசார் நடத்திய விசாரணையில், குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணம் என தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மேலும் செய்திகள்
SETC பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு 50% கட்டணச் சலுகை: அமைச்சர் சிவசங்கர் தகவல்
ஆவின் தயிரில் தஹி என்ற இந்தி பெயரை அச்சிடக் கூறிய FSSAIக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கண்டனம்.!
தொல்லியல் துறை அனுமதி, மண்டலக்குழு அனுமதி, மாநிலக் குழு அனுமதி பெற்று 16 பணிகள் ரூ.5.5 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன: தமிழ்நாடு சட்டபேரவையில் உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்
ரூ.730.87 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்திற்குள் அரசுக்கு செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மது அருந்தாதவரை மது அருந்தியதாக காட்டிய பிரீத் ஆனலைசர் மிஷின்: சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவால் போக்குவரத்து கூடுதல் ஆணையர் விளக்கம்
ஆவின் தயிரில் தாஹி என இந்தியில் பெயர் அச்சிடப்படாது: பால்வளத்துறை அமைச்சர் நாசர் திட்டவட்டம்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!