மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இருக்கக்கூடாது பொது சிவில் சட்டம் கொண்டு வருவது உறுதி: அமித்ஷா திட்டவட்டம்
2022-11-25@ 02:13:13

புதுடெல்லி: அனைத்து ஆலோசனைகள், விவாதங்கள் முடிந்த பின்னர் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதில் ஒன்றிய அரசு உறுதி பூண்டுள்ளது என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது, ‘அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம்’ பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமித்ஷா, ‘‘பாரதிய ஜன சங்கம் காலத்தில் இருந்தே தேர்தல் வாக்குறுதியில் பொது சிவில் சட்டம் பற்றி பாஜ கூறி வருகிறது. அரசமைப்பு சபையும் தகுந்த நேரத்தில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
ஒரு மதசார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இருக்கக்கூடாது. தேசமும் நாடும் மதசார்பற்றது என்றால் மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் எப்படி இருக்கலாம்.
அரசமைப்பு சபையில் வழங்கப்பட்ட உறுதி மொழி காலப்போக்கில் மறக்கப்பட்டு விட்டது. பாஜவை தவிர வேறு எந்த கட்சியும் இதை ஆதரிக்கவில்லை. ஜனநாயகத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் தேவை.
வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா இடையே முக்ரோ என்ற இடம் உள்ளது. இரு மாநிலங்களின் எல்லையாக உள்ள இந்த பகுதியில் சில நாட்களுக்கு முன் அசாம் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மேகாலயாவை சேர்ந்த 5 பேர், அசாம் வனத்துறை அதிகாரி ஒருவர் என 6 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா நேற்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் செய்திகள்
அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி: உலக பணக்காரர்கள் பட்டியலில் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்
சாமானிய மக்களுக்கு பலன் தரும் பட்ஜெட்; வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்..!
ஜெகன் அண்ணா காலனியில் வீடுகள் கட்டும் பணியை மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டும்-சித்தூர் ஆணையாளர் உத்தரவு
திருப்பதி பைரெட்டிபள்ளி பகுதியில் ₹3.25 கோடியில் புதிய சிமெண்ட் சாலைகள், கால்வாய்கள்-எம்பி தகவல்
உணவு விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது குழந்தைகளின் உடல்நலம், கல்வியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்-ஆய்வு செய்த கலெக்டர் உத்தரவு
மத்திய பிரதேசம் மது கடைகளில் கோசாலைகளை தொடங்க போகிறேன்: உமா பாரதி ஆவேசம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!