சிறார் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் வரைமுறையின்றி கைது நடவடிக்கைகள் தொடர்கிறது: சென்னை ஐகோர்ட் அதிருப்தி
2022-11-24@ 20:47:13

சென்னை: குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் தெளிவாக இருந்தும் சிறார் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் போலீஸ் மீது ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. சிறார் குற்ற வழக்குகளில் வரைமுறையின்றி கைது நடவடிக்கைகளை போலீஸ் தொடர்வது குறித்து, சிறார் சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாள்வது பற்றி போலீஸ், மருத்துவத்துறை, குழந்தைகள் நல வாரியம் இணைந்து அறிக்கை தர உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறார் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் காவல்துறையினர், வரைமுறையின்றி கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் தெளிவாக இருந்தும் சிறார் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் காவல்துறையினர், வரைமுறையின்றி கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு, சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக மாணவனுக்கு எதிராக சிதம்பரநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட குழந்தைகள் நலக்குழு மாணவியை அரசு நல காப்பகத்தில் அனுமதித்தனர். இதையடுத்து மாணவி மீட்க கேட்டு மாணவியின் தந்தை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மாணவியை பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் சந்திரசேகர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக வலைதளங்கள் மூலம் உருவாகக்கூடிய அழுத்தம் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் ஆட்சியரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் இது போன்ற நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இருவரையும் கைது செய்ததன் மூலமாக என்ன சாதித்து விட்டீர்கள் என்ற கேள்வியையும் நீதிபதிகள் எழுப்பினார்கள்.
சிறார் சம்பந்தமான வழக்குகளை கையாள்வது குறித்து காவல்துறை, மருத்துவத்துறை, குழந்தைகள் நல வாரியம் மற்றும் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட வக்கீல்கள் ஆகியோர் இணைந்து ஆலோசித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!
வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொள்ள வேண்டுமென கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் கடிதம்..!
அதிமுக விவகாரத்தில் புதிய திருப்பம்; நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார்: ஓபிஎஸ் தரப்பு உறுதி..!
தமிழ்நாட்டின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காப்பாற்ற போர்க்கால வேகத்தில் நீர்வள ஆதாரங்களை காப்பாற்றவும் மேம்படுத்தவும் வேண்டும்: ராமதாஸ் ட்வீட்
இரட்டைத் தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது; அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது: ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு வாதம்..!
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் பேர் ஆப்சென்ட்: பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!