கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்
2022-11-24@ 10:57:42

காடையாம்பட்டி: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, காடையாம்பட்டியில் மண்ணாலான அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில், பெண்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில், மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் மண்ணால் ஆன பானை, சட்டி, அடுப்பு, அகல்விளக்கு, குதிரை, யானை, நாய் உள்ளிட்ட பொம்மைகளை தயாரித்து வருகின்றனர். இவர்கள் தை பொங்கல் மற்றும் கோடை காலங்களில் மன்பானை செய்வது, கார்த்திகை மாதத்தில் அகல்விளக்குகள் செய்வது, திருவிழா காலங்களில் பொம்மைகள் செய்வது என சீசனுக்கு ஏற்றார்போல், மண்ணால் ஆன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட உள்ளது.
தீபத்திருவிழாவிற்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், காடையாம்பட்டி பகுதியில் தற்போது அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குடிசைத்தொழில் போல் இதை மேற்கொள்ளும் இவர்கள் இரவு, பகலாக அகல் விளக்குகளை தயாரித்து வருகின்றனர். இங்கு தயாராகும் அகல் விளக்குகளை, வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர்.
ஒரு விளக்கு 70 காசு வீதம் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இங்கிருந்து வாங்கிச் செல்லும் அகல் விளக்குகளை ஓமலூர், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். நடப்பாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால், திருவிழாக்கள் களைகட்டி வருகின்றன. அதைப்போல், கார்த்திகை தீபத்திருவிழாவை எதிர்நோக்கி, அகல்விளக்குகள் விற்பனையும் அமோகமாக நடக்கும் என்ற நம்பிக்கையில், அகல்விளக்குகள் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கோவை இளைஞர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் 31.66 லட்சம் உண்டியல் காணிக்கை
பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரியில் பெண்கள் மீதான கொடுமைகள் குறித்த நிலை காட்சி: ‘தத்ரூபமாக’ மாணவிகள் நடித்துக் காட்டினர்
மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்து தரக் கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம்; பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை: பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம்..!
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிப்பு: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் தொடக்கம்!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!