திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மாட வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: கலெக்டர், எஸ்பி நேரடி ஆய்வு
2022-11-24@ 10:55:49

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் காத்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மாடவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகிேயார் நேரில் ஆய்வு செய்தனர். திருவண்ணாமலையில் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, முன்ேனற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதையொட்டி, சுவாமி திருவீதியுலா நடைபெறும் திருக்கோயில் மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது.
அதையொட்டி, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து, போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட இடத்தை கடந்து ஆக்கிரமித்துள்ள கட்டிடங்கள், இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்ட மேற்கூரைகள், நடைபாதை கடைகள் போன்ற அனைத்து விதமான ஆக்கிரமிப்புகளும் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
இந்நிலையில், மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை கலெக்டர் பா.முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது, கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், நகராட்சி ஆணையர் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும், தேரோடும் மாட வீதியில் தேரோட்டத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாதபடி, சாலைகளை பழுது நீக்கி சீரமைக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார். அதோடு, தேர் சீரமைப்பு பணிகளையும் அவர் நேரில் பார்வையி்ட்டார். முழுமையாக சீரமைப்பு பணியை முடித்து, தேரோட்டத்துக்கு முன்பாக அதன் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறையிடம் சான்று பெற வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் தொல்லை குமரி பாதிரியார் பாளை மத்திய சிறைக்கு மாற்றம்: ஆபாச படங்களை பரப்பியவர்களை பிடிக்க கேரளாவில் தனிப்படை முகாம்
படிக்காததை கண்டித்ததால் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவி
புதுச்சேரியில் நீர்தேக்க தொட்டி மீது ஏறி அரசு ஊழியர்கள் பெட்ரோல் கேனுடன் தற்கொலை மிரட்டல்: பணி நீக்கத்தை கண்டித்து போராட்டம்; போலீசாருடன் வாக்குவாதம்
கீழடி அருங்காட்சியகம் மெக்சிகோ தூதர் வியப்பு: பழம்பொருட்கள் குறித்து கேட்டறிந்தார்
எண்ணெய் கசிவு பாதிப்பை ஆய்வு செய்யக் கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு
மக்கள் செல்ல விடாமல் கட்டுப்பாடுகள் கொடநாடு பாதை பிரச்னை எஸ்டேட் வக்கீல் விடுதலை: 16 ஆண்டு வழக்கில் குன்னூர் நீதிமன்றம் தீர்ப்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி