திண்டுக்கல் துணை தாசில்தார் கைது
2022-11-24@ 01:39:27

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே தலையாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளமுருகன். இவரது பாட்டி திருமலை அம்மாள் 1986ல் இறந்து விட்டார். அதற்காக இறப்பு சான்றிதழ் கேட்டு இளமுருகன் கடந்த 2021ல் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு தாக்கல் செய்தார். சான்றிதழை அளிக்க திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலக துணை தாசில்தார் ஜெயப்பிரகாஷ் (48) ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பேரம் பேசி ரூ.3 ஆயிரம் தர சம்மதித்த இளமுருகன் இதுபற்றி லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அறிவுறுத்தலின்படி இளமுருகன், ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை ஜெயபிரகாஷிடம் வழங்கியபோது மறைந்திருந்த போலீசார் ஜெயபிரகாஷை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
ஆருத்ரா நிதி நிறுவனம் ரூ.2,438 கோடி மோசடி முக்கிய குற்றவாளியான பாஜ நிர்வாகி ஹரிஷ் கைது: ரகசிய இடத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை
சிறுவனுக்கு செக்ஸ் டார்ச்சர் வாலிபர் போக்சோவில் கைது: உடலில் கடித்து காயப்படுத்திய கொடூரம்
ரவுடியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது
மணிப்பூரில் இருந்து கடத்தி வந்த 9 கிலோ மெத்தம் பெட்டமைன் போதை பவுடர் பறிமுதல்: 2 பேர் கைது; முக்கிய குற்றவாளிக்கு வலை
புதிய இணைப்புக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் மின்வாரிய அதிகாரி கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி