SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திண்டுக்கல் துணை தாசில்தார் கைது

2022-11-24@ 01:39:27

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே தலையாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளமுருகன். இவரது பாட்டி திருமலை அம்மாள் 1986ல் இறந்து விட்டார். அதற்காக இறப்பு சான்றிதழ் கேட்டு இளமுருகன் கடந்த 2021ல் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு தாக்கல் செய்தார். சான்றிதழை அளிக்க திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலக துணை தாசில்தார் ஜெயப்பிரகாஷ் (48) ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பேரம் பேசி ரூ.3 ஆயிரம் தர சம்மதித்த இளமுருகன் இதுபற்றி லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அறிவுறுத்தலின்படி இளமுருகன், ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை ஜெயபிரகாஷிடம் வழங்கியபோது மறைந்திருந்த போலீசார் ஜெயபிரகாஷை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்