SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

18 நாட்களுக்குபின் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

2022-11-23@ 19:35:52

அம்பை: வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கல்லிடைக்குறிச்சி அருகே ஆண்டுதோறும் தண்ணீர் கொட்டும் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த நவ.5ம்தேதி முதல் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அருவிகளில் வெள்ளம் தணிந்து தண்ணீர் சீராக வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து 18 நாட்களுக்கு பிறகு இன்று (23ம்தேதி) முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி அளித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பக பிரியா உத்தரவிட்டுள்ளார். ஆனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லை. வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்