கழிவுநீரை அகற்ற கோரிக்கை
2022-11-23@ 19:35:19

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஒன்றியம், வேல்வார்கோட்டை ஊராட்சிக்குட்பட்டது ஊராளிபட்டி. இங்கு கிராமமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யும் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. அருகிலேயே அரசு தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் கழிவுநீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையால், இப்பகுதியில் மேலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் நிலவுவதாக கிராமமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கழிவுநீரில் உருவாகும் கொசுக்களால் பள்ளி, அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்துவதுடன், கால்வாய் வசதியும் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கேளம்பாக்கம் அருகே ஷேர் ஆட்டோ மீது கார் மோதி 2 பெண்கள் பரிதாப பலி: 7 பேர் படுகாயம்
திருவாரூர் அருகே பயங்கரம்: விசி பிரமுகர் வெட்டிக்கொலை.! பாஜ பிரமுகர் உள்பட 6 பேர் கைது
கல்வியையும், மருத்துவத்தையும் திமுக ஆட்சி இரண்டு கண்களாக பார்க்கிறது: வேலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
காட்டுநாவல் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
ஆண்டிமடம் பகுதியில் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும்-வியாபாரிகள் கோரிக்கை
30 ஆண்டுக்கு முன் காணாமல் போன சாம்பான் குளத்தை கண்டுபிடித்து தாருங்கள்-புகார் எதிரொலியால் அதிகாரிகள் அளவீடு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!