ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தல்..!
2022-11-23@ 16:53:15

சென்னை : ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஆளுநரை சந்தித்த போது வலியுறுத்தியதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்பட பல்வேறு கோரிக்கைகளை ஆளுநரிடம் முன் வைத்ததாக தெரிவித்தார்.
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆளுநருடன் பேசியதாகவும், அதற்கான தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். உள்ளாட்சிக்கான நிதி மற்ற துறைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி ஒன்றிய அரசு வழங்கிய உள்ளாட்சி நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார். ஆளுநர் உடனான இந்த சந்திப்பின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், ஜெயக்குமார், எம்.பி., சி.வி.சண்முகம், எம்.எல்.ஏ. முனுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகள்
பாஜவை கண்டித்து தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சென்னை காவேரி மருத்துவமனையில் இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு?: சர்வதேச கருத்தரங்கில் மருத்துவர்கள் தகவல்
தமிழகத்தில் நடப்பாண்டில் ரூ.1,406 கோடியில் 150 கி.மீ., சாலை பணிகள் விரிவாக்கம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ திட்டத்தில் பொதுமக்கள் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அமிர்தஜோதி அறிவிப்பு
லட்சக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: சென்னையில் நடந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமைச்செயலர் இறையன்பு அதிகாரிகளுக்கு உத்தரவு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி