திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
2022-11-23@ 12:28:31

சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்துள்ளனர். கடந்த 2019 ஜூலை 4-ம் தேதி இளைஞரணி செயலாளராக உதயநிதி தேர்வானார். திமுகவில் 15-வது உட்கட்சி தேர்தல் நிறைவடைந்ததை தொடர்ந்து ஒவ்வொரு அணிக்கு செயலாளர்கள் அறிவித்துள்ளனர். திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இளைஞரணி துணை செயலாளர்களாக ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா, அப்துல் மாலிக், பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக மகளிரணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்து துறை முருகன் அறிவித்துள்ளார். திமுக மகளிரணி தலைவராக விஜயா தாயன்பன் நியமனம். திமுக மகளிர் அணி இணை செயலாளராக குமரி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மகளிர் அணி துணைச் செயலாளர்களாக பவானி ராஜேந்திரன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மகளிர் தொண்டர் அணி செயலாளராக ப.ராணி, இணைச் செயலாளராக தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளராக மாலதி நாகராஜ் நியமனம் செய்து துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளர்களாக சேலம் சுஜாதா, ராணி ரவிச்சந்திரன், அமலு, மாலதி, தேன்மொழி, உமாமகேஸ்வரி, ஜெசி பொன்ராணி, நாராயணசாமி ஆகியோரை நியமனம் செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
பெரியார் பல்கலை. ஊழல் விசாரணை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்
கஞ்சா விற்ற 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை போதைப்பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க நடவடிக்கை: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
மாணவர்களின் தகவல்கள் திருடி விற்பனை மாவட்ட திட்ட அலுவலரிடம் 3 மணி நேரம் விசாரணை: 10 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை அன்புமணி கண்டனம்
உயர்கல்வித்துறை உத்தரவு தமிழ்நாடு கல்லூரிக்கல்வி இயக்குனராக கீதா நியமனம்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!