ஊராட்சி தலைவர் அவதூறாக பேசுவதாகக் கூறி தென்காசி கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் கவுன்சிலர்
2022-11-22@ 21:26:37

தென்காசி: தென்காசி அருகே முத்துமாலைபுரத்தை சேர்ந்த முப்பிடாதி மனைவி மகேஸ்வரி (35). சில்லரைபுரவு ஊராட்சி மன்றத்தில் 2வது வார்டு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர், நேற்று தென்காசி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த தென்காசி போலீசார் ஓடி வந்து தடுத்து நிறுத்தியதோடு உடலில் தண்ணீர் ஊற்றி மீட்டனர்.
மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். விசாரணையில், ‘தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு வழங்க மகேஸ்வரி வந்திருந்தார். மனுவில், ‘4 பெண்களுக்கு சீட்டுப்பணம் பெற்று கொடுத்தேன். அவர்கள் பணத்தை தராமல் என்னை ஊராட்சி தலைவரிடம் பொய்யாக புகார் கொடுத்ததால் அவர் என்னை அவதூறாக பேசுகிறார்’ என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்
அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆவின் பணி நியமனம் ரத்து எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
ஊட்டி மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவக்கம்
நாகத்தின் வாந்தியில் இருந்து வந்த மாணிக்க கல் என கூறி சாமியார் வேடத்தில் ஏமாற்றிய போலி ஐஏஎஸ் மீது வழக்கு
எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு
மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன் குற்றச்சாட்டு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!