SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற வழக்கு, பாஜக தேசிய பொதுச்செயலாளருக்கு ‘லுக்அவுட்’ நோட்டீஸ்: தெலங்கானா போலீஸ் நடவடிக்கை

2022-11-22@ 19:18:06

ஐதராபாத்: தெலங்கானானில் ஆளும் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்றதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், துஷார் வெள்ளப்பள்ளி, ஜக்குசாமி ஆகியோருக்கு எதிராக போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த நிலையில், மேற்கண்ட மூன்று பேருக்கும் எதிராக தெலங்கானா காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் மூவரும் விசாரணைக்கு ஆஜராகாததால் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக பி.எல்.சந்தோஷ், துஷார் வெள்ளப்பள்ளி, ஜக்குசாமி ஆகிய மூன்று பேரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் காவல்துறை முன் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்களுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது’ என்றனர். முன்னதாக இந்த வழக்கில் பாஜகவை சேர்ந்த ராமச்சந்திர பார்தி, நந்தகுமார், சிம்மயாஜி சுவாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்