பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறை, உலகின் மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஐ.நா பொதுச்செயலாளர் கவலை
2022-11-22@ 17:13:31

நியூயார்க்: பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை உலகின் மிகப்பெரிய மனித உரிமை மீறலாக மாறி வருவதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ம் தேதியன்று ‘பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘ஒவ்வொரு 11 நிமிடங்களுக்குள்ளும், ஒரு பெண் அல்லது சிறுமி அவரது வாழ்க்கைத் துணையால் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுகிறார்.
உலகளவில், 15 முதல் 49 வயதுடைய 10 பெண்கள் மற்றும் சிறுமிகளில் ஒருவருக்கு அவர்களின் உறவுகள் அல்லது வெளிநபர்களால் உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர் என்று அறிக்கை காட்டுகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையானது, உலகின் மிகப்பெரிய மனித உரிமை மீறலாக மாறி வருகிறது. வரும் 2026ம் ஆண்டுக்குள் பெண்கள் உரிமை அமைப்புகள் மற்றும் இயக்கங்களுக்கான நிதியை 50 சதவீதம் அளவிற்கு அதிகரிக்க வேண்டும்.
பெண்களும், சிறுமிகளும் வெறுக்கத்தக்க வார்த்தைகள், பாலியல் துன்புறுத்தல், ஆபாச புகைப்படங்கள் போன்ற பல வகைகளில் ஆன்லைன் வன்முறையை எதிர்கொள்கின்றனர். பாலின பாகுபாடு, வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்தால் உலகின் பாதிபேர் பெரும் விலையை கொடுக்கிறார்கள். வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பங்கேற்பு உள்ளது. அப்படியிருந்தும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பறிக்கப்படுகின்றன.
மேலும் செய்திகள்
இங்கிலாந்தில் நாளை முதல் ‘ஸ்பிரிங் பூஸ்டர்’ தடுப்பூசி
அமெரிக்காவை புரட்டி போட்ட சூறாவளி: 11 பேர் பலி; 50க்கும் மேற்பட்டோர் காயம்
ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் குற்றச்சாட்டால் டிரம்ப்புக்கு குவிகிறது தேர்தல் நன்கொடை: 24 மணி நேரத்தில் ரூ.32 கோடி திரட்டினார்
புகுஷிமா அணுமின் நிலைய விபத்து பகுதிகளில் மக்கள் வசிக்க அனுமதி: 12 ஆண்டுகளுக்கு பின் நடவடிக்கை
லண்டன் வீதிகளில் வலம் வரும் நாக சைதன்யா, ஷோபிதா ஜோடி
பாகிஸ்தானில் இலவச ரேஷன் பொருட்களை வாங்க முண்டியடித்த போது நெரிசல்: குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்த பரிதாபம்..!
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!