நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; சபரிமலையில் இன்று முதல் தரிசன நேரம் அதிகரிப்பு
2022-11-22@ 16:54:22

திருவனந்தபுரம்: சபரிமலையில் தொடர்ந்து பக்தர்கள் குவிந்து வருவதால் இன்று முதல் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாலையில் 4 மணிக்கு பதிலாக 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி கடந்த 2 வருடங்களாக அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டதால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. வார நாட்களில் தினமும் சராசரியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வார இறுதி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உள்ளது. நேற்றும் மிக அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர்.
ஆன்லைன் மூலம் மட்டும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தவிர நிலக்கல், திருவனந்தபுரம் குமுளி உள்பட கேரளாவில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள உடனடி முன்பதிவு மையங்கள் மூலமாகவும் ஏராளமான பக்தர்கள் பதிவு செய்து நேற்று சபரிமலைக்கு வந்திருந்தனர். பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சபரிமலையில் தரிசன நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி முதல் தினமும் அதிகாலை 3 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் நடை திறக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று முதல் மாலை 4 மணிக்கு பதிலாக 3 மணிக்கு நடை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் சபரிமலையில் அதிகளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர். அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்ட போது பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
மேலும் செய்திகள்
இந்திய தூதரகம் மீது தாக்குதல்.. வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என அமெரிக்கா கண்டனம்!!
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.3ஆக பதிவு.. அச்சத்தில் பொதுமக்கள்!
பணி நீக்கம் செய்யப்பட்ட எச் 1 பி விசா ஊழியர்கள் 60 நாட்களில் வௌியேற வேண்டும் என்பதில் உண்மையில்லை: அமெரிக்க குடியுரிமை இயக்குநரகம் தகவல்
கனடாவில் 2வது முறையாக மகாத்மா காந்தி சிலை சேதம்
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு 6 பேர் பலி
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!