குளிர்பிரதேசம் போல் சில்லென்று மாறிய சென்னை: திடீர் வானிலை மாற்றத்தை அனுபவித்த மக்கள்
2022-11-22@ 14:40:26

சென்னை: சில்லென்று மென்குளிர் காற்றும் லேசான மழைச்சாரலும் தலைக்கு மேல் குடைப்பிடித்த வெண்மேகம் கூட்டமும் சென்னை வாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரு தினங்களாக சில்லென்று மென்குளிர் காற்றும் மற்றும் லேசான மழைத்தூரலுடன் ரம்மியமான சூழல் நிலவுகிறது. உதகை, கொடைக்கானலை போன்ற இதமான வானிலை நிலவுவதால் சென்னை வாசிகள் பலரும் மெய்சிலிர்த்து போய் உள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் வாக்கிங் சென்ற பலரும் வானிலை இதமாக இருப்பதாக தெரிவித்தனர். நடப்பு மாதத்தில் நேற்று 11-வது முறையாக தட்பவெப்பம் 25 கிடிரி செல்சியஸ்க்கும் கீழாக வெப்பநிலை பதிவாகி கோவை, பெங்களூருவை விட சில்லென்று இதமான சூழல் நிலவியது.
இதனிடையே புயலோ புயல் சின்னமோ உருவாகும் போது வடதிசையில் உள்ள குளிர்ந்த காற்று கடலோர மாவட்டங்களின் வீசுவது வழக்கம் என வானிலை ஆர்வலர் பிரதிப் ஜான் தெரிவித்துள்ளார். இது பனியினால் விசிய குளிர்ந்த காற்று இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சென்னையில் மழை குறைந்தாலும் மார்கழி மாதத்தை போல் குளிர் வாட்டுவதால் அதிகாலையில் அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் அவதிகுள்ளாகினர். வாகன ஓட்டிகள் பலரும் எதிர்வருக் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாததால் புகை மூட்டம்போல் காட்சி அளித்த சாலையில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு சென்றனர்.
மேலும் செய்திகள்
கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
பெரியார் பல்கலை. ஊழல் விசாரணை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்
கஞ்சா விற்ற 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை போதைப்பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க நடவடிக்கை: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
மாணவர்களின் தகவல்கள் திருடி விற்பனை மாவட்ட திட்ட அலுவலரிடம் 3 மணி நேரம் விசாரணை: 10 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை அன்புமணி கண்டனம்
உயர்கல்வித்துறை உத்தரவு தமிழ்நாடு கல்லூரிக்கல்வி இயக்குனராக கீதா நியமனம்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!