ஏரிகளுக்கு மழைநீர் வரத்து குறைவு: செம்பரம்பாக்கம்-புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்
2022-11-22@ 14:36:08

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் உள்ளன. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. தற்போது ஏரியில் 2509 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்ததால் இந்த 2 ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மழை இல்லாததால் ஏரிகளுக்கு மழைநீர் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது.
இன்று காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு 50 கனஅடி தண்ணீர் மட்டும் வருகிறது. நீர் மட்டம் 18 அடிக்கும்(மொத்த உயரம்21அடி) கீழ் குறைந்தது. இதைத்தொடர்ந்து புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு இன்று காலை நிறுத்தப்பட்டது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. தற்போது ஏரியில் 2509 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர் வரத்து 100 கனஅடியாக சரிந்தது. நீர் மட்டம் 20 அடிக்கும் கீழ்(மொத்த உயரம்24 அடி) சென்றதால் உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஏரியில் தற்போது 2491 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
விழுப்புரத்தில் அப்பாவி இளைஞர் இப்ராஹிம் துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!
சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் சாலையை சுத்தம் செய்யும் போது திடீரென தீப்பற்றிய மாநகராட்சி வாகனம்..!!
நாமக்கல் - துறையூர் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் எ.வ. வேலுபதில்
அம்பத்தூர் பால் பண்ணையில் இயந்திர கோளாறு காரணமாக பால் அனுப்ப கால தாமதம்: அதிகாரிகள் பணியிடைநீக்கம்
நெல்லையில் ஐபிஎஸ் அதிகாரி கைதிகளின் பற்களை பிடுங்கிய சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்..!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!