“பெண்ணியம் போற்றுவோம் 2022” என்ற தலைப்பில் நடக்கவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
2022-11-22@ 14:15:26

சென்னை: “பெண்ணியம் போற்றுவோம் 2022” என்ற தலைப்பில் நடக்கவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மகளிர் உதவி மையம் அழைப்பு விடுத்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை 181 மகளிர் உதவி மையத்தின் திட்டத் தலைவர் ஷரின் பாஸ்கோ, டிஜிட்டல் மீடியா நிபுணர் கிஷோர் தேவா மற்றும் டிஜிட்டல் மீடியா இயக்குநர் மெரின் ஆகியோர் சந்தித்து, நவம்பர் 25ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஓழிப்பதற்கான சர்வதேச தினத்தையொட்டி “பெண்ணியம் போற்றுவோம் 2022” என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் “181 மகளிர் உதவி மையம்” பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திட நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை அம்மையம் நடத்தவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேட்டு அழைப்பு விடுத்தனர்.
தமிழ்நாடு அரசின் “181 மகளிர் உதவி மையம்” பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ரகசிய சேவை மையம் ஆகும். இதன்மூலம் குடும்ப பிரச்னை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல்துறை, மருத்துவத்துறை, சட்டஉதவி, மனநல ஆலோசனை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படுகின்றன. 181 இலவச தொலைபேசி எண், மின்னஞ்சல், ஆன்லைன் உரையாடல் போன்றவை மூலமாக உதவி மையத்தை நாடும் வசதி உள்ளது. மேலும், பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களையும், குடும்ப வன்முறை மற்றும் இதர வகை கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்தும் கேட்டறியலாம்.
181 மகளிர் உதவி மையம் நடத்தவுள்ள பெண்ணியம் போற்றுவோம்
2022-இன் நிகழ்ச்சியில், திரைப்பட விழா, மகளிர் உதவி மையத்தின் விழிப்புணர்வு பயிலரங்கம், கல்லூரிகளில் பெண்கள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு, சைக்கிள் பேரணி, மணல் சிற்பக்கலை, ஆன்லைன் வழியே கருத்தரங்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
மேலும் செய்திகள்
குளித்தலை தொகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு நினைவுச் சின்னம்: அமைச்சர் சாமிநாதன் தகவல்
தனிப்பட்ட அதிகாரம் என்ற தலைப்பில் 50 லட்சத்தை ரூ.5 கோடியாக உயர்த்தியுள்ளனர்: ஆளுநர் மாளிகை மீது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் தாக்கு..!!
தமிழகத்தில் நேற்று நடந்த 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் பேர் ஆப்சென்ட்
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் நடைமேடை தடுப்பு கதவுகள்: சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தகவல்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
விழுப்புரத்தில் அப்பாவி இளைஞர் இப்ராஹிம் துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!