மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் கார் மோதி பால்காரர் பலி
2022-11-22@ 01:08:49

ஆலந்தூர்: மீனம்பாக்கம் அண்ணா தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (63). மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று அதிகாலை தனது மொபட்டில் மீனம்பாக்கத்தில் இருந்து, ஜிஎஸ்டி சாலையை கடந்து பழவந்தாங்கல் பகுதிக்கு செல்ல முயன்றார். அப்போது, சிக்னல் அருகே வேகமாக வந்த கார் கிருஷ்ணமூர்த்தி மொபட் மீது வேகமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
தகவலறிந்த பரங்கிமலை போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, கிருஷ்ணமூர்த்தியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய ஈரோட்டை சேர்ந்த ஹாரிஸ் சோனு (27) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்: சென்னை காவல்துறை தகவல்
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!
ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்