பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்தில் கழுத்தறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி
2022-11-22@ 01:08:04

பெரம்பூர்: பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்தில் பிளேடால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. புளியந்தோப்பு கே.பி.பார்க் ஏ-பிளாக் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (21). பிளைவுட் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில், வீட்டின் அருகே போதையில் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (26) என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. ராஜேஷ், தாஸை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
உடனடியாக பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்திற்கு சென்ற தாஸ், என்னை தாக்கிய நபரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், எனக்கூறி ரகலையில் ஈடுபட்டார். அதற்கு போலீசார், போதை தெளிந்தவுடன் வந்து புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். இதை ஏற்காத தாஸ், மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து தனது கழுத்து மற்றும் மார்பில் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த பேசின் பிரிட்ஜ் போலீசார், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் மீது ஏற்கனவே பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
சாதாரண மனிதனுக்கு என்ன பொருந்துமோ, அது தான் ராகுல் காந்திக்கும்: சட்டத்தின் அடிப்படையிலேயே தகுதி நீக்கம்: அண்ணாமலை பேச்சு
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வழங்கும் பொருட்கள் சேவை,வரி மற்றும் மின் வழிச்சீட்டு குறித்த இணையவழி பயிற்சி
ராகுல் காந்திக்கு சிறைத்தண்டனை விதித்து, மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை: சீமான் கடும் கண்டனம்..!
சென்னையில் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு குறித்த இணையவழி பயிற்சி
ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
பின்தங்கிய பகுதிகளில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி