SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடி ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்: தெற்கு ரயில்வேயிடம் கனிமொழி எம்பி மனு

2022-11-22@ 01:02:31

சென்னை: தூத்துக்குடி ரயில் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அதிகாரியிடம் தூத்துக்குடி எம்பி  கனிமொழி மனு அளித்தார். சென்னை  தெற்கு ரயில்வே தலைமையகத்தில் ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை தூத்துக்குடியின் மக்களவை உறுப்பினர் கனிமொழி சந்தித்து தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு  கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

குறிப்பாக, தூத்துக்குடியில் இருந்து தினசரி கோவைக்கு இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்றும், மதுரையில் இருந்து மும்பைக்கு செல்லும் ‘லோக்மானியா ரயிலை’ தூத்துக்குடியில் இருந்து இயக்குமாறும், திருநெல்வேலி - பாலக்காடு இடையே இயங்கும் ‘பாலருவி எக்ஸ்பிரஸ்’ ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என்றும், 3 நடைமேடைகளுடன் இருக்கும் தூத்துக்குடி ரயில் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கனிமொழி எம்பி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தினர், தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் வழங்கினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்