SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

 சிறுத்தை மர்மச்சாவு விவகாரம் அதிமுக எம்பி ரவீந்திரநாத்தின் மேலாளர் வனத்துறை முன் ஆஜர்

2022-11-22@ 00:32:47

தேனி: தேனி அதிமுக எம்பி ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை மர்மமான முறையில் இறந்த விவகாரம் தொடர்பாக, அவரது மேலாளர் வனத்துறை அதிகாரி முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்பிக்கு சொந்தமான தோட்டம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கோம்பைக்காடு பகுதியில் உள்ளது. இத்தோட்டத்தில் உள்ள சோலார் மின்வேலியில் கடந்த செப்.28ம் தேதி ஆண் சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது தொடர்பாக ரவீந்திரநாத் எம்பி மாவட்ட உதவி வன பாதுகாவலர் ஷர்மிலி முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது தோட்டத்தை தனது மேலாளர் கிருஷ்ணாதான் நிர்வகித்து வந்ததாக தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, கிருஷ்ணா நேற்று தேனி வனச்சரகர் செந்தில்குமார் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்