கலைஞர் குறித்து டிவிட்டரில் அவதூறு பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சைபர் க்ரைம் பிரிவில் திமுகவினர் புகார்
2022-11-22@ 00:32:41

சென்னை: முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து டிவிட்டரில் அவதூறு பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநில சைபர் க்ரைம் பிரிவில் திமுக ஐடி பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகரில் உள்ள மாநில சைபர் க்ரைம் தலைமை அலுவலகத்தில் திமுக சென்னை தெற்கு மாவட்ட ஐடி பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் தினேஷ் (35) நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் திமுக ஐடி பிரிவில் ஒருங்கிணைப்பாளராக இருப்பதால் டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களை தினமும் பார்ப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை ‘கட்டெறும்பு- பிஜேபி’ என்ற டிவிட்டர் கணக்கை பார்த்தபோது, எங்கள் கட்சியின் தலைவரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மற்றும் தற்போதைய முதல்வர் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சை இணைத்து ரயிலில் அருவெறுக்கதக்க நிலையில் இருப்பது போல் சித்தரித்து அவதூறாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவை பார்த்த நான் மற்றும் எனது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தோம். எனவே டிவிட்டரில் அவதூறாக பதிவு செய்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
Artist Twitter Defamation Person Cybercrime DMK Complaint கலைஞர் டிவிட்டரில் அவதூறு பதிவு நபர் சைபர் க்ரைம் திமுகவினர் புகார்மேலும் செய்திகள்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
விழுப்புரத்தில் அப்பாவி இளைஞர் இப்ராஹிம் துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!
சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் சாலையை சுத்தம் செய்யும் போது திடீரென தீப்பற்றிய மாநகராட்சி வாகனம்..!!
நாமக்கல் - துறையூர் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் எ.வ. வேலுபதில்
அம்பத்தூர் பால் பண்ணையில் இயந்திர கோளாறு காரணமாக பால் அனுப்ப கால தாமதம்: அதிகாரிகள் பணியிடைநீக்கம்
நெல்லையில் ஐபிஎஸ் அதிகாரி கைதிகளின் பற்களை பிடுங்கிய சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்..!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!