தண்டையார்பேட்டை 4வது மண்டலத்தில் 2.000 பேருக்கு கொசுவலைகள் : மண்டல குழுத்தலைவர் வழங்கினார்
2022-11-21@ 01:55:52

தண்டையார்பேட்டை: பெருநகர சென்னை மாநகராட்சியில் நீர்நிலை பகுதிகளில் வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு கொசுவலைகள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்டையார்பேட்டை 4வது மண்டலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு 15,000 பேருக்கு கொசுவலைகளை வழங்கி துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை தண்டையார்பேட்டை வினோபா நகரில் 38வது வார்டு நீர்வழித்தடங்கள் அருகாமையில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் நேதாஜிகணேசன் கலந்துகொண்டு 2000 பேருக்கு கொசுவலைகளை வழங்கினார். இதில், வட்டச் செயலாளர் சுந்தர், பொது சுகாதாரத்துறை மண்டல நல அலுவலர் டாக்டர் சாய்சுதா, சுகாதார ஆய்வாளர் ரவிக்குமார், துப்புரவு அலுவலர் சதீஷ்குமார் உள்பட அதிகாரிகள், மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க ரூ. 30,000 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர் கைது
ஆவடி அருகே பரபரப்பு ரத்த வாந்தி எடுத்து ஜிம் மாஸ்டர் திடீர் மரணம்: இரண்டு கிட்னி செயலிழப்புக்கு ஸ்டீராய்டு மருந்து காரணமா?
பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளர் இடைத்தரகர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி
ரூ. 44 கோடி மதிப்பீட்டில் சென்னை குடிநீர் ஆதாரமாக மாதவரம் ரெட்டேரி மாற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
160 ஏக்கர் அரசு நிலத்துக்கான வாடகை பாக்கி ரூ. 731 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும்: கிண்டி ரேஸ் கிளப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
வேளச்சேரிக்கு பிரத்யேகமாக ஒரு மின்நிலையம் அமைக்க வேண்டும்: பேரவையில் அசன் மவுலானா வலியுறுத்தல்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!