2வது முறை ஜனாதிபதிக்கு கண் புரை ஆபரேஷன்
2022-11-21@ 00:39:46

புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு கடந்த ஜூலை 25ம் தேதி பதவியேற்றார். அவருக்கு வயது 66. அவரது இரு கண்களகஞம் புரை இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதன் பேரில், கடந்த 16ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவருடைய இடது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து, நேற்று அவரது வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக ஜனாதிபதி மாளிகை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், ஜனாதிபதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
வெறுப்பு பேச்சு முடிவுக்கு வர அரசியலில் மதத்தை பயன்படுத்த கூடாது: உச்ச நீதிமன்றம் அறிவுரை
நாளை மறுநாள் முதல் 1000 மருந்துகள் விலை 11% உயர்கிறது
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே மசோதா நிறைவேற்றம்: வன பாதுகாப்பு திருத்த மசோதா தாக்கல்
வெளிநாடுகளில் இருந்து தமிழ் நாடு என்ஜி ஓக்களுக்கு 3 ஆண்டில் ரூ. 6804 கோடி நிதி: ஒன்றிய அரசு தகவல்
கூகுளுக்கு ரூ. 1,337 கோடி அபராதம்: கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவு
கிரிமினல் வழக்கில் உயர் நீதிமன்ற தடை எதிரொலி லட்சத்தீவு எம்பி முகமது பைசல் தகுதி நீக்கம் வாபஸ்: மக்களவை செயலகம் அறிவிப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!