2வது திருமணம் செய்து கொண்டதால் தம்பதிக்கு செருப்பு மாலை; சிறுநீரை குடிக்க வைத்த கொடூரம்: ராஜஸ்தான் சமுதாய பஞ்சாயத்தில் தீர்ப்பு
2022-11-20@ 17:36:11

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இளைஞனுக்கும், அவரது மனைவிக்கும் செருப்பு மாலை அணிவித்து சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரின் மதோராஜ்புரா பகுதியை சேர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது. அந்த வீடியோவில், திருமணமான தம்பதிக்கு செருப்பு மாலை அணிவித்து, அவர்களுக்கு பாட்டிலில் நிரப்பட்ட சிறுநீரை குடிக்க வைத்துள்ளனர். கிராம பஞ்சாயத்து தலைவர்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது.
தற்போது வீடியோ வைரலானதால், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘தற்போது வைரலாகி வரும் வீடியோ தொடர்பான சம்பவம் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி நடந்தது. சம்பந்தப்பட்ட இளைஞருக்கு கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், அவர் அவரது மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த இளைஞர், பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து முதல் மனைவியின் சகோதரருக்கு தெரியவந்தது. அதனால் அவர், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஊர் சமுதாய பஞ்சாயத்தில் புகார் அளித்தார். அவர்கள் பாதிக்கப்பட்ட இளைஞனையும், புதியதாக திருமணமான பெண்ணிடமும் விசாரணை நடத்தினர். பின்னர், சமுதாய பஞ்சாயத்து நிர்வாகிகள் அளித்த தீர்ப்பின்படி, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இளைஞருக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் இருவருக்கும் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இருவருக்கும் பாட்டிலில் நிரப்பப்பட்ட சிறுநீரை குடிக்க கொடுத்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக தற்போது 5 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.
மேலும் செய்திகள்
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் ரூ.500 நோட்டுகளை வீசியெறிந்த காட்சிகள் வெளியீடு
ராகுல் காந்திக்கு வழிகாட்டுகிறதா ஐகோர்ட் தீர்ப்பு?.. காங்கிரஸ் கட்சி எம்.பி. முகமது ஃபைசலின் தகுதி நீக்க உத்தரவு ரத்து..!
ஏப்ரல் 1 முதல் ரூ.2000-க்கு மேலான யூபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் போன்ற விளையாட்டுகளை நாங்கள் அங்கீகரிக்கவில்லை : ஒன்றிய அரசு
வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி?.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ராகுல்காந்திக்கு ஆதரவாக டெல்லியில் அமைதி பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கைது: பெண் நிர்வாகிகளிடம் போலீசார் அத்துமீறல்..!
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!