தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் 20,000 ஆவண எழுத்தர்கள் நியமனம்: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்
2022-11-20@ 17:10:48

மதுரை: தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் 20,000 ஆவண எழுத்தர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெறுவதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாளையொட்டி, வரும் 27ம் தேதி முதல் மதுரை வடக்கு மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது குறித்து வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், திருப்பாலையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
வணிக வரி பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: தலையாரி, சத்துணவு பணியாளர்கள், ரேஷன் கடையில் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதற்கான பட்டியலை பாகுபாடு, வேறுபாடு பார்க்காமல் தயாரிக்கப்பட இருக்கிறது. அதுபோல தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் 20,000 ஆவண எழுத்தர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நியமிக்கப்பட இருக்கின்றனர். சென்ற 10 ஆண்டுகளாக போராட்டங்களை கடந்து வெற்றி பெற்று இருக்கிறோம்.
வாக்காளர் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளில் பூத் கமிட்டியினர் சிறப்பாக செயல்பட வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வதுடன் திமுகவையும் கட்டி காத்து வருகிறார். இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 27ம் தேதி முதல் மதுரையில் வடக்கு, மாநகர், தெற்கு மாவட்டங்கள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடத்த 11 பேர் கொண்ட அணியாக 400 குழுக்களை தேர்வு செய்ய வேண்டும்இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சோமசுந்தரபாண்டியன், மாவட்ட துணை செயலாளர்கள் ரோகிணி, வெங்கடேசன் எம்எல்ஏ, இளைஞர் அணி ஜிபி.ராஜா, பகுதி செயலாளர்கள் சசிக்குமார், மருதுபாண்டியன், மேற்கு ஒன்றிய சேர்மன் வீரராகவன், வக்கீல் கலாநிதி உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் கொள்ளை: 3 பேரை கைது செய்தது தனிப்படை.. 62 சவரன் நகை பறிமுதல்..!
துவங்கியது கோடைகாலம்: பழநி பகுதியில் மண்பானை விற்பனை ‘விறுவிறு’
பெரியகுளம் பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனையும் நெல்மணிகள்: நெல் குடோன்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
தேவதானப்பட்டி பகுதி மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்து அதிக மகசூலை அள்ளலாம்: விவசாயிகளுக்கு வேளாண் துறை ‘அட்வைஸ்’
வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன விவகாரத்தில் 7 பேர் கைது..!!
சின்னச்சுருளி அருவியில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்: சுற்றுலா பயணிகள் வேதனை
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!