காவல்துறை அதிகாரிகளுக்கு இடையே நடந்த மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி போலீஸ் கமிஷனர் முதலிடம்; டிஜிபி சைலேந்திரபாபு பரிசு வழங்கினார்
2022-11-20@ 15:52:37

திருச்சி: சென்னையில் நடந்த மாநில அளவிலான காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் முதல் பரிசு பெற்று அசத்தினார். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவுபடி, மாநில அளவிலான காவல்துறையினர் காவல் துணை கண்காணிப்பாளர் முதல் காவல்துறை தலைவர் வரையிலான அதிகாரிகளுக்கான (Pistol / Revolver) மற்றும் INSAS துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நேற்று சென்னை அடையாறில் உள்ள மருதம் (Commando Force-ல்) நடைபெற்றது.
இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகம் முழுவதிலும் உள்ள காவல் ஆணையர்கள், சரக காவல்துறை துணைத்தலைவர், காவல் கண்காணிப்பாளர்கள் ஆகிய காவல்துறை உயரதிகாரிகள் சுமார் 260 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் Pistol / Revolver ஆகியவைகள் (15, 20, 25, 30மீட்டர்) பிரிவுகளிலும், (INSAS Rifle) (50மீட்டர்) பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.
திருச்சி மாநகர காவல்துறை சார்பில் INSAS Rifle ரக துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மேற்கண்ட போட்டிகளில் 5.56 INSAS Rifle (50மீட்டர்) ரக துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, போட்டியில் பங்கு பெற்று 26 அதிகாரிகளுக்கிடையேயான முதல் பரிசு வென்று, தங்கம் பதக்கம் வென்று அசத்தினார். துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு வெற்றி பெற்ற காவல்துறை உயரதிகாரிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன விவகாரத்தில் 7 பேர் கைது..!!
சின்னச்சுருளி அருவியில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்: சுற்றுலா பயணிகள் வேதனை
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியை மறித்து நிறுத்தி மக்காச்சோளம் ருசித்த காட்டு யானையால் பரபரப்பு
மழையால் பழைய பாலம் சேதம்: மங்குழி புதிய பாலம் கட்டும் பணி துவங்கியது
சுவரோவிய கலையில் கல்லூரி மாணவி வரைந்த படம் ஓவிய கண்காட்சியில் தேர்வு
இனி 6 மணி நேரத்தில் சென்னை டூ கோவை : வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் தொடக்கம்; 8ம் தேதி பிரதமர் சேவையை தொடக்கி வைக்கிறார்!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!