திறந்தவெளி வேண்டாம்... பொதுக்கழிப்பறையை பயன்படுத்தி சுகாதாரமான தேனி மாவட்டத்தை உருவாக்குவோம்: கலெக்டர் வேண்டுகோள்
2022-11-20@ 10:52:32

தேனி: மனித சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கழிப்பறைகளின் தேவை, அவசியத்தை உணர்ந்து சிங்கப்பூரில் ஜாக் சிம் என்பவரால் கடந்த 2001&ம் ஆண்டு முதல்முறையாக நவ.19ம் தேதி உலக கழிப்பறை கழகம் தொடங்கப்பட்டது. அதன்பின், 2013 முதல் நவ.19&ம் தேதியை உலக கழிப்பறை தினமாக ஐ.நா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. கழிப்பறை சுகாதாரத்தின் முக்கியத்துவத்தையும், அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதுதான் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். உலக கழிப்பறை தினத்தையொட்டி சீலையம்பட்டியில் நடந்த சுகதார விழிப்புணர்வு ஓட்டத்தை கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார். தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீலையம்பட்டியில் நேற்று உலக கழிப்பறை தினத்தையொட்டி தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் சுகாதார விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் முரளீதரன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் கலந்து கொண்டவர்களை சீலையம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திருப்பதி வரவேற்றார். நிகழ்ச்சியின்போது கலெக்டர் முரளீதரன் பேசும்போது, ‘‘ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் வகையிலும்,நமது சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ளும் வகையில் நவம்பர் 19ம் தேதி உலக கழிப்பறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூடாது. பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்தி சுகாதாரமான தேனி மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பொதுக்கழிப்பறை தவிர குடியிருப்புகளில் கழிப்பறை கட்ட விரும்புவோருக்கு தனிநபர் கழிப்பறை கட்ட ரு.12 ஆயிரம் அரசு மானியம் வழங்கி வருகிறது’’ என்றார். இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அண்ணாத்துரை, தேனி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ஜெகதீசசந்திரபோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் இந்திரஜித் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கோவை இளைஞர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் 31.66 லட்சம் உண்டியல் காணிக்கை
பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரியில் பெண்கள் மீதான கொடுமைகள் குறித்த நிலை காட்சி: ‘தத்ரூபமாக’ மாணவிகள் நடித்துக் காட்டினர்
மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்து தரக் கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம்; பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை: பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம்..!
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிப்பு: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் தொடக்கம்!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!