அடுத்த வாரிசுக்கு அரசியல் பயிற்சி ஏவுகணை வீசியதை மகளுடன் ரசித்த கிம்: புகைப்படம் வெளியிட்டது வடகொரியா
2022-11-20@ 00:12:46

சியோல்: வடகொரியா வீசிய ஏவுகணையை தனது மகளுடன் அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிடுவதை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தொடர்ந்து ஏவி மிரட்டி வரும் வடகொரியா, கடந்த சில நாட்களுக்கு முன் அணு ஆயுத திறன் கொண்ட ஹவாசோங்-17 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவியது. இது, அமெரிக்காவையும் தாக்கக் கூடியது. ஒவ்வொரு ஏவுகணை சோதனையையும் நேரில் பார்வையிட்டு வரும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், முதல் முறையாக தனது மகளுடன் ஏவுகணை தளத்துக்கு வந்து, ஏவுகணை ஏவுதலை பார்த்தார். இந்த புகைப்படத்தை அந்நாட்டு அரசு ஊடகமும் வெளியிட்டுள்ளது.
கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக வடகொரியாவை ஆண்டு வரும் உன் குடும்பத்தின் 4வது தலைமுறைதான் அவருடைய மகள். அதிபர் கிம் ஜாங் உன்னின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக யாருக்கும் தெரியாது. ஆனால், தென் கொரிய ஊடகங்கள், கிம் 2009ல் ஒரு முன்னாள் பாடகரான ரியை திருமணம் செய்து கொண்டதாகவும், தம்பதியருக்கு 2010, 2013 மற்றும் 2017ம் ஆண்டுகளில் பிறந்த மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன. இதில் எந்த குழந்தையை அவர் ஏவுதளத்துக்கு அழைத்து சென்றார் என்பது தெரியவில்லை. அதிபர் தனது குழந்தையுடன் இருக்கும் படத்தை அரசு ஊடகமே வெளியிடுவது இதுவே முதல்முறை. இதன்மூலம், தனக்கும், தனது தங்கைக்கும் பிறகு, அடுத்த தலைமுறை தலைவரை உருவாக்கும் அரசியல் பயிற்சியில் உன் ஈடுபட்டு இருப்பதாக கருதப்படுகிறது.
Tags:
Next Heir Political Training Missile Launcher Kim Enjoyed With Daughter Photo North Korea அடுத்த வாரிசு அரசியல் பயிற்சி ஏவுகணை வீசிய மகளுடன் ரசித்த கிம் புகைப்படம் வடகொரியாமேலும் செய்திகள்
இந்திய தூதரகம் மீது தாக்குதல்.. வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என அமெரிக்கா கண்டனம்!!
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.3ஆக பதிவு.. அச்சத்தில் பொதுமக்கள்!
பணி நீக்கம் செய்யப்பட்ட எச் 1 பி விசா ஊழியர்கள் 60 நாட்களில் வௌியேற வேண்டும் என்பதில் உண்மையில்லை: அமெரிக்க குடியுரிமை இயக்குநரகம் தகவல்
கனடாவில் 2வது முறையாக மகாத்மா காந்தி சிலை சேதம்
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு 6 பேர் பலி
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!