SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலககோப்பை கால்பந்து போட்டிகளை சட்ட விரோதமாக பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் இணையதளங்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

2022-11-19@ 19:33:57

சென்னை: உலககோப்பை கால்பந்து போட்டிகளை சட்ட விரோதமாக பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் 12,000 இணையதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நாளை தொடங்கி வரும் டிசம்பர் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரபஞ்சம் முழுவதும் கால்பந்து ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நாளை கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக துவங்குகிறது. இந்த போட்டிகள் அடுத்த மாதம் 18-ம்தேதி வரை நடக்கிறது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலக கோப்பை போட்டியான இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்ற viacom18 media  நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. உலகக்கோப்பை போட்டிகளை சட்ட விரோதமாக பதிவு செய்து ஒளிபரப்பும் இணையதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என viacom18 media நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பெருந்தொகையை முதலீடு செய்து ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ளதாக viacom18 media நிறுவனம் மனுவில் தகவல் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் உலககோப்பை கால்பந்து போட்டிகளை சட்ட விரோதமாக பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் 12,000 இணையதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்