பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
2022-11-19@ 12:10:15

சென்னை : பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். பொங்கல் பண்டிகையின் போது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. இந்த திட்டத்திற்கு தேவையான மொத்த வேட்டி, சேலைகளை கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, கைத்தறி துறை அமைச்சர் காந்தி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும், கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வேட்டி, சேலைகள் டெண்டர் குறித்தும், எவ்வளவு கொள்முதல் செய்யவேண்டும் எனவும், அதன் தரம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகின்ற பொங்கல் பண்டிக்கைக்கு வழங்குவதற்கு ஏதுவாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகள்
கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
பெரியார் பல்கலை. ஊழல் விசாரணை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்
கஞ்சா விற்ற 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை போதைப்பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க நடவடிக்கை: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
மாணவர்களின் தகவல்கள் திருடி விற்பனை மாவட்ட திட்ட அலுவலரிடம் 3 மணி நேரம் விசாரணை: 10 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை அன்புமணி கண்டனம்
உயர்கல்வித்துறை உத்தரவு தமிழ்நாடு கல்லூரிக்கல்வி இயக்குனராக கீதா நியமனம்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!