ஊழியர்கள் தொடர்ந்து வெளியேறுவதால் டிவிட்டர் அலுவலகங்கள் மூடல்: நிபுணர்களுடன் மஸ்க் ஆலோசனை
2022-11-19@ 01:15:00

நியூயார்க்: எலான் மஸ்க் காலக்கெடு விதித்ததைத் தொடர்ந்து ஊழியர்கள் வெளியேறி வருவதால் பல்வேறு பகுதிகளில் உள்ள டிவிட்டர் அலுவலங்கங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன. டெஸ்லா நிறுவனரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். 7,500 ஊழியர்கள் பணி நீக்கம் உள்ளிட்ட அவரது அதிரடி நடவடிக்கைகளினால் டிவிட்டர் நிறுவனத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வேலை உள்ளிட்ட சலுகைகளை நீக்கியதுடன், நீண்ட நேர வேலையா அல்லது 3 மாத ஊதியத்துடன் விடுப்பா? என்பது பற்றி ஆலோசிக்க 2 நாள் கெடு விதித்து, ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பி அழுத்தம் கொடுத்தார். இதனால், ஊழியர்கள் தாங்களாகவே முன்வந்து வேலையை ராஜினாமா செய்து வருகின்றனர். இதனால், வேலையில் இருப்பவர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனால் மேலும் பலர் வேலையை விட்டு விட திட்டமிட்டுள்ளனர். இதனால், டிவிட்டர் நிறுவனத்தின் அலுவலகங்கள் பல நேற்று முன்தினம் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
* அமேசானில் 300 இந்தியர்கள் வேலை காலி
டிவிட்டர், பேஸ்புக்கை தொடர்ந்து 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பி உள்ள அமேசான் நிறுவனம், இந்த நடவடிக்கை வருடாந்திர செயல்பாட்டு கூட்டத்தின் மறுஆய்வு திட்டம் தான், இந்த பணிநீக்கம் அடுத்தாண்டும் தொடர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அமேசானின் பணி நீக்க நடவடிக்கையினால், இந்திய ஊழியர்கள் 300 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Tags:
Employees Twitter offices closing expert Musk advice ஊழியர்கள் டிவிட்டர் அலுவலகங்கள் மூடல் நிபுணர் மஸ்க் ஆலோசனைமேலும் செய்திகள்
பெல்ஜியம் சாக்லேட்டில் உருவான வண்ண ஈஸ்டர் முட்டைகள்: சமையல் கலைஞர்கள் வடிவமைத்த முட்டைகளை ரசித்த மக்கள்
இடி, மழையுடன் பனிப்புயல்: கனடாவில் திடீரென மாறிய வானிலையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்.. மக்கள் அவதி..!!
சுவாசத் தொற்றுநோய் காரணமாக போப் பிரான்சிஸ் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதி : வாட்டிகன் அறிக்கை
மியான்மரில் ஆங் சான் சூகி கட்சி கலைப்பு
ஆஸி. நியூசவுத்வேல்ஸ் மாகாண பொருளாளராக இந்தியர் பதவியேற்பு
இந்திய தூதரகம் மீது தாக்குதல்.. வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என அமெரிக்கா கண்டனம்!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!