SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

 புழல் மத்திய சிறையில் கைதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வு

2022-11-19@ 00:49:57

புழல்: புழல் மத்திய சிறையில், கைதிகளின் அடிப்படை வசதிகள், தேவைகள் குறித்து சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மகளிர் என 3பிரிவுகளில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன், எஸ்.ஆர்.ராஜா, பண்ருட்டி வேல்முருகன், ஓசூர் பிரகாஷ், மாதவரம் சுதர்சனம் ஆகிய 6 பேர் கொண்ட குழுவினர் புழல் மத்திய சிறையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட குழுவினர், அவர்களின் தேவைகள் மற்றும் குறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து சிறைக்குள் கைதிகள் மேற்கொண்டு வரும் ரொட்டி தயாரிப்பு பணி, செக்கு எண்ணெய் பணிகள் குறித்து சிறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து சிறைக்குள் கைதிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் கல்வி பயிற்சி, பார்வையாளர்கள் சந்திக்கும் அறை, சிறை மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும் சட்டமன்ற குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது சிறைக் கண்காணிப்பாளர்கள் நிகிலா நாகேந்திரன், கிருஷ்ணராஜ் மற்றும் சிறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்