டோர் டெலிவரி முறை தொடர்ந்தால் தமிழகத்தில் வியாபாரிகளே இருக்க முடியாது: விக்கிரமராஜா வேதனை
2022-11-19@ 00:35:09

சென்னை: தமிழகத்தில் டோர் டெலிவரி முறை தொடர்ந்து கொண்டே இருந்தால் வியாபாரிகளே இருக்க முடியாது என விக்கிரமராஜா வேதனை தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் சங்க மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடந்தது. இதில் வணிகர் சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது: கொரோனா காலகட்டத்திற்கு சென்று இப்பொழுதுதான் வியாபாரிகள் சற்று வளர்ச்சி காண்கிறார்கள். டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரால் வணிகவரித் துறை அதிகாரிகள் அதிகமாக அபராதத்தை விதித்து வருகின்றனர்.
தமிழக அரசு இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கிரிப்டோ கரன்சி பயன்படுத்தும் முறையை வணிகர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் விளைபொருள் கொள்முதலில் இ-நாம் முறையை ஒன்றிய, மாநில அரசுகள் அமல்படுத்தும் முறையை உடனடியாக நிறுத்த வேண்டும். இதனால் மொத்த கொள்முதல் செய்யும் வணிகர்களுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கார்ப்பரேட் வணிகத்தை மட்டுமே ஊக்குவிக்கும் முறையை அரசு செயல்படுத்தி வருகிறது. டோர் டெலிவரி முறை தமிழ்நாட்டில் தொடர்ந்து கொண்டே இருந்தால் வியாபாரிகளே இருக்க முடியாது. மின் கட்டண அளவீடு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை செலுத்துவதை மாதாந்திர அடிப்படையில் மின் கட்டணம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரக்கூடிய வாரத்தில் முதலமைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு பேசினார்.
Tags:
Door delivery in Tamil Nadu traders Vikramaraja pain டோர் டெலிவரி தமிழகத்தில் வியாபாரிகளே விக்கிரமராஜா வேதனைமேலும் செய்திகள்
SETC பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு 50% கட்டணச் சலுகை: அமைச்சர் சிவசங்கர் தகவல்
ஆவின் தயிரில் தஹி என்ற இந்தி பெயரை அச்சிடக் கூறிய FSSAIக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கண்டனம்.!
தொல்லியல் துறை அனுமதி, மண்டலக்குழு அனுமதி, மாநிலக் குழு அனுமதி பெற்று 16 பணிகள் ரூ.5.5 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன: தமிழ்நாடு சட்டபேரவையில் உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்
ரூ.730.87 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்திற்குள் அரசுக்கு செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மது அருந்தாதவரை மது அருந்தியதாக காட்டிய பிரீத் ஆனலைசர் மிஷின்: சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவால் போக்குவரத்து கூடுதல் ஆணையர் விளக்கம்
ஆவின் தயிரில் தாஹி என இந்தியில் பெயர் அச்சிடப்படாது: பால்வளத்துறை அமைச்சர் நாசர் திட்டவட்டம்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!