அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது; கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பால பணி: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ நேரில் ஆய்வு
2022-11-18@ 17:34:04

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மேல்விளாகம், கலியனூர், மணவூர், விடையூர், நெமிலி அகரம் உள்ளிட்ட கிராம மக்கள் 20 கிமீ தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பணியை ஆய்வு செய்து விரைந்து முடிக்க வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ அறிவுறுத்தினார். அதிமுக ஆட்சியில் 2016-17ம் ஆண்டு ரூ.3.60 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்பால பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு முடிக்கப்படாமல் இருந்தது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்காக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதையறிந்த வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, அந்த மேம்பாலத்தை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கட்டி முடிக்கப்படாமல் உள்ள மேம்பாலத்தை விரைந்து முடிக்க பொதுப்பணித் துறையினருக்கு அறிவுறுத்தினார். அதன்பேரில் பொதுப்பணி துறையினர், மேம்பாலத்தின் இருபுறங்களிலும் ஜேசிபி இயந்திரத்தை வைத்து தற்காலிகமாக மணல்மேடு அமைத்து அப்பகுதி மக்கள் சென்று வருவதற்கான ஏற்பாடுகளை செய்தார்.இதையடுத்து நெமிலி அகரம் பகுதியிலும் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக எம்எல்ஏ தெரிவித்துள்ளார். ஆய்வின்போது திமுக ஒன்றிய செயலாளர்கள் கொண்டஞ்சேரி ரமேஷ், அரிகிருஷ்ணன், கூளூர் ராஜேந்திரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
அரசு பேருந்து மோதி மகன் கண் முன் தாய் பரிதாப பலி
கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து மை பூசி அழிப்பு: மர்ம நபருக்கு வலை
கோயம்பேட்டில் பரபரப்பு பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் ரகளை
துப்பு துலங்காத கொலைகளை கண்டறிய சிறப்பு துப்பறியும் காவல் படை: சென்னை கமிஷனர் அதிரடி
மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 4ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: கலெக்டர் உத்தரவு
மூத்த குடிமக்கள் வசதிக்காக வேளச்சேரி பேபி நகரில் ரேஷன் கடை: அசன் மவுலானா எம்எல்ஏ வலியுறுத்தல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!