மின்வசதி இல்லாமல் 1 கோடி பேர் தவிப்பு: உக்ரைன் அதிபர் கவலை
2022-11-18@ 16:45:15

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், உக்ரைனின் முக்கிய நகரங்களான ஒடெசா, வின்னிட்சியா, சுமி, கீவ் ஆகியன மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்விநியோகம் இல்லாத பகுதியில் மட்டும் மக்கள் இருளில் மூழ்கி உள்ளனர்.
இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிவிப்பில், ‘ரஷ்யப் படைகளின் புதிய தாக்குதல்களால் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் மின்சாரம் இல்லை. உக்ரைன் நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பை ரஷ்யப் படைகள் முடக்கி உள்ளன. தற்போது 10 மில்லியனுக்கும் (ஒரு கோடி) அதிகமான உக்ரைன் மக்கள் மின்சார வசதி இல்லாமல் கடும் பாதிப்பில் உள்ளனர். குறிப்பாக கீவ், ஒடெசா, வின்னிட்சியா, சுமி உள்ளிட்ட நகரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் இருந்து போப்பாண்டவர் இன்று டிஸ்சார்ஜ்
டிரம்ப் மீதான கிரிமினல் வழக்கு வரலாற்றில் இருண்ட நாள்: நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி கடும் கண்டனம்
அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சராக இந்திய வம்சாவளி தேர்வு
போட்டியின்றி தேர்வு உலக வங்கி தலைவராக அஜய் பங்கா
பாகிஸ்தானில் பெண் டாக்டருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொலை: ஒரே மாதத்தில் 2 மருத்துவர்கள் பலி
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!