சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ₹5 ஆயிரம் அபராதம்-வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
2022-11-18@ 14:10:16

வேலூர் : வேலூர்-ஆற்காடு சாலை, ஆரணி சாலை, தொரப்பாடி சாலை, காட்பாடி சாலை போன்ற முக்கிய போக்குவரத்து மிகுந்த சாலைகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிகிறது. சாலைகள் மட்டுமின்றி பொதுஇடங்களிலும் மக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் இடையூறாக கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இந்த முக்கிய சாலைகளில் சுற்றிதிரியும் கால்நடைகளால் வாகனங்களில் வருபவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். இந்நிலையில் முக்கிய சாலைகளில் தினமும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
வேலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கால்நடைகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாநகராட்சி சார்பில் கால்நடைகளை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் மாநகராட்சி 1வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் நேற்று முன்தினம் காட்பாடியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது விருதம்பட்டில் சாலைகளில் சுற்றித்திரிந்த 5 மாடுகளை பிடித்து மாநகராட்சி அலுவலக வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.
பிடிக்கப்பட்ட 5 மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ₹5ஆயிரம் வீதம் ₹25ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்திவிட்டு மாடுகளை மீட்டு செல்லவேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தவறும்பட்சத்தில் பிடிபட்ட 5 மாடுகளையும் கோசாலையில் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காட்பாடி 1வது மண்டலம் அண்ணா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேலூர் மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கு விடுத்து வந்தனர். இந்நிலையில், வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் உத்தரவின்பேரில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் பணியாளர்கள் நேற்று காட்பாடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்தனர்.
மேலும் செய்திகள்
புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கோவை இளைஞர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் 31.66 லட்சம் உண்டியல் காணிக்கை
பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரியில் பெண்கள் மீதான கொடுமைகள் குறித்த நிலை காட்சி: ‘தத்ரூபமாக’ மாணவிகள் நடித்துக் காட்டினர்
மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்து தரக் கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம்; பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை: பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம்..!
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிப்பு: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் தொடக்கம்!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!