திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீது அமலாக்க துறை தொடர்ந்த வழக்கு ரத்து
2022-11-18@ 00:09:45

சென்னை: அரக்கோணம் எம்பியான திமுகவை சேர்ந்த எஸ்.ஜெகத்ரட்சகன், கடந்த 1982ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் பேக்டரி என்ற நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தபோது, நில அபகரிப்பில் ஈடுபட்டதாக குவிண்டன் டாவ்சன் அளித்த புகாரில் கடந்த 2013ம் ஆண்டு காவல்துறை விசாரணை நடத்தி புகாரை முடித்து வைத்தது. அதே புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2016 நவம்பர் மாதம் இரு வழக்குகளை பதிவு செய்தனர். அதன் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் ஜெகத்ரட்சகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கையும் ரத்து செய்யக் கோரி ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, சிபிசிஐடி தொடர்ந்த பிரதான வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியாது என்று தெரிவித்து ஜெகத்ரட்சகன் மீது அமலாக்க துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
Tags:
DMK MP Jagadratsakan Enforcement Department Case Cancellation திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அமலாக்க துறை வழக்கு ரத்துமேலும் செய்திகள்
விழுப்புரத்தில் அப்பாவி இளைஞர் இப்ராஹிம் துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!
சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் சாலையை சுத்தம் செய்யும் போது திடீரென தீப்பற்றிய மாநகராட்சி வாகனம்..!!
நாமக்கல் - துறையூர் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் எ.வ. வேலுபதில்
அம்பத்தூர் பால் பண்ணையில் இயந்திர கோளாறு காரணமாக பால் அனுப்ப கால தாமதம்: அதிகாரிகள் பணியிடைநீக்கம்
நெல்லையில் ஐபிஎஸ் அதிகாரி கைதிகளின் பற்களை பிடுங்கிய சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்..!!
EPS-க்கு மீண்டும் செக் வைத்த OPS : அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!