SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வன்னிப்பாக்கம் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடத்தை மாணவர்கள் திறந்து வைத்தனர்

2022-11-17@ 18:50:15

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வன்னிப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து இடியும் நிலையில் இருந்தது. இதனால் அங்குள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் மாணவர்கள் படித்து வந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.19.80 லட்சம் ஒதுக்கி, அங்கு புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. எனினும், அப்பள்ளி கட்டிட திறப்பு விழா பல்வேறு காரணங்களால் 2 முறை தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், வன்னிப்பாக்கம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா, துணை தலைவர் சித்ரா, வார்டு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா உள்பட பலர் எம்எல்ஏவின் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் எம்எல்ஏ, ஒன்றிய குழு தலைவர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் பள்ளி கட்டிட திறப்புவிழாவிற்கு வரவில்லை. இதைத் தொடர்ந்து, புதிய கட்டிடத்தை அப்பள்ளி மாணவர்களே ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்